search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிகிச்சை தொகை"

    முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர பல்வேறு அடிப்படை தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #CMCHIS #treatmentamountraised
    சென்னை:

    முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர பல்வேறு அடிப்படை தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்று பெற்று குடும்ப அட்டையுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மையத்தில்அளிக்க வேண்டும்.

    மனுதாரர்கள் அளித்துள்ள விவரங்களை பரிசீலித்து தகுதியுடைய நபர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவர். ஒரு குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி, அவர்களது குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஆகியோர் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறலாம். அவர்களது பெயர்கள் அனைத்தும் குடும்ப அட்டையில் இடம் பெற்று இருக்க வேண்டும்.


    மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்து 6 மாதங்களுக்கு மேல் தங்கி இருப்பவர்களும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணையலாம். அவர்கள் தமிழ்நாடு தொழில் துறையிடம் இருந்து சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    தமிழக முகாம்களில் உள்ள இலங்கையை சேர்ந்த தமிழர்கள் முகாம்களில் தங்கி இருப்பதற்கான சான்றுகளை இணைத்து எந்தவொரு வருமான சான்றும் இல்லாமல் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டமானது தமிழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 11-ந் தேதி நடைமுறைக்கு வந்தது.

    இதுவரை இந்த திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பயன் பெற்றுள்ளனர்.

    சென்னையில் 1.95 லட்சம் பேரும், கோவை மாவட்டத்தில் 1.47 லட்சம் பேரும், காஞ்சீபுரத்தில் 1.46 லட்சம் பேரும், விழுப்புரத்தில் 1.33 லட்சம் பேரும், வேலூரில் 1.35 லட்சம் பேரும், திருவள்ளூரில் 1.43 லட்சம் பேரும், சேலத்தில் 1.38 லட்சம் பேரும், ஈரோட்டில் 1.10 லட்சம் பேரும், மதுரையில் 1.37 லட்சம் பேரும், நெல்லை மாவட்டத்தில் 1.01 லட்சம் பேரும் பயன் பெற்றுள்ளனர்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 80 ஆயிரம் முதல் 95 ஆயிரம் பேர் வரை சிகிச்சை பெற்றுள்ளனர். #CMCHIS
    மருத்துவ காப்பீடு தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக அறிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு தமிழிசை சவுந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார். #treatmentamount #CMCHIS #treatmentamountraised #TamilisaiSoundararajan
    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

    தமிழக முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக சிகிச்சைக்காக அரசு அளிக்கும் தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் இந்தியா முழுவதும் 50 கோடி மக்கள் பலன்பெறும் அளவுக்கு பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் ரூ.5 லட்சம் என்று அறிவித்திருந்த நிலையில், இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கு மத்திய அரசு கொடுத்திருக்கும் விதிமுறைகளின் அடிப்படையில் 77 லட்சம் பேர் பயனாளியாக மாறுவார்கள்.

    இன்னும் 80 லட்சம் பேர் ஏற்கனவே மாநில அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற்று வருவதால் பிரதமரின் மருத்துவ காப்பீட்டில் கிடைக்கும் தொகை ரூ.5 லட்சம் அளவுக்கு உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

    தமிழகத்தில் ஏற்கனவே மருத்துவ காப்பீட்டு திட்டம் நடைமுறையில் இருப்பதால், குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் காப்பீட்டுதொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. ஆனால் மருத்துவ காப்பீட்டு இல்லாத மாநிலத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு முழுவதுமாக ரூ.5 லட்சம் தொகையானது பிரதமரின் திட்டம் மூலம் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் 50 கோடி மக்கள் பாரத பிரதமரின் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தில் பயன்பெறுவர். மேலும் பிரதமரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற்றவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 2–வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.#treatmentamount #CMCHIS #treatmentamountraised #TamilisaiSoundararajan
    முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறும் அதிகபட்ச தொகை ரூ.2 லட்சத்தில் ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #treatmentamount #CMCHIS #treatmentamountraised
    சென்னை:

    தமிழ்நாட்டில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏழை எளிய குடும்பங்கள் ஆண்டு வருவாய் 72,000/- க்கு கீழ் உள்ள பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தின்கீழ் தரமான அறுவைச்சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சை பதிவுபெற்ற தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்து வயதினரும் பயன்பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


    பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1016 சிகிச்சை முறைகளுக்கும், 113 தொடர் சிகிச்சை முறைகளுக்கும் மற்றும் 23 அறிதல் கண்டுப்பிடிப்பு முறைகளுக்கும் இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறும் அதிகபட்ச தொகை 2 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும் இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என்றும்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தெரிவித்துள்ளார். #treatmentamount #CMCHIS #treatmentamountraised  
    ×